கடல் அலை கரையை கடந்து நிலப்பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால் உஸ்முதுனாவ சந்தியில் இருந்து ஹிங்கடுவை குமாரகந்த சந்தி வரை வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எலகந்த வீதி அவதான நிலையில் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.